Thursday 22 February 2024

அரண்மனை நாயே.., அடக்கடா வாயை..!

அரண்மனை நாயே..,
அடக்கடா வாயை..!

புலியைப் பார்த்து
பூனையும் சூடு
போட்டுக்கொண்ட கதையாக..,

தேசிய அளவில்
இராகுல் காந்தியின்
நடை பயணத்தைக் கண்டு...
தமிழகத்திலும் ஒரு
நடை பயணம் நடந்தது..!

நடையா அது நடையா
நாடகமன்றோ நடந்தது...

வெண்ணெய் வெட்டி அண்ணாமலைக்கு
வெளிச்சம் போட்ட
ஊடகங்கள்..!

பறையடித்து பாசுரம் பாடிய
பத்திரிகைகள்..!
அப்பப்பா...
என்ன ஆர்ப்பாட்டமான கொக்கரிப்பு..!
வாரத்திற்கு ஒரு ஊழல் பட்டியல் வெளியீடு..!
நடைப்பயண முடிவுக்குள் பல
அமைச்சர்கள் சிறைச்சாலையில் இருப்பார்கள் என்று...
ஊர் ஊராக ஊழல் என்ற
கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்த
ஊதாரிக் கூட்ட அறிவிப்பு...!

பத்திரிகைகளோ...
தமிழக அரசின் மீது
அண்ணாமலை ஊழல் அணுகுண்டுகளை வீசுவதாக
பரபரப்பாக துதி பாடின..!

கூட்டிய கூட்டத்தை 
மக்கள் வெள்ளமென
கள்ளக் கணக்கு காட்டின..!

மாநில அரசு மீது பொய்யான
குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கற்பனைக் குதிரைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்..!

கடந்த அதிமுக ஆட்சியில்
இரண்டு அமைச்சர்கள் மீது
அமலாக்கத்துறையால்
தொடுக்கப்பட்ட வழக்குகள்
நீதிமன்ற தீர்ப்புக்கு உள்ளானது தவிர...
வேறெதுவும் அண்ணாமலை 
கிழிக்கவில்லை..!

உண்மையில் ஊழல் மண்டிக்கிடப்பது மத்திய ஆட்சியில்தான்..!

வெளிநாட்டு புலனாய்வுக்குழு
ஹிண்டன்பெர்க்கின்
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை
அண்ணாமலையின்
குருமகா சன்னிதானத்தின் மீது
சுமத்தியது..!

பிரான்ஸ் நாட்டுடன் நடந்த
ரஃபேல் விமானம் வாங்கிய
வியாபார பரிவர்த்தனையில்
ஊழல் நடைபெற்றதாக
பிரான்சு அரசு மீதும்,
இந்திய அரசு மீதும்
பிரான்சு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது..!

மொரிஷியஸ் நாட்டிலிருந்து
அதானி குடும்பத்துக்கு
மாற்றப்பட்ட ரூபாய் இருபதாயிரம் கோடியை
யார் பணமென்று விசாரிக்கப்படாமல்
வேதாளம் முருங்கை மரத்தின் மீது
தொங்குவது போல
தொங்கிக்கொண்டிருக்கிறது..!

இந்த லட்சணத்தில்...
கடந்த 10 ஆண்டு ஆட்சியில்
ஒரு குண்டூசியை திருடிவிட்டார்
என்ற குற்றச்சாட்டைக் கூட
மோடி ஆட்சியின் மீது வைக்க முடியாது...
என அண்ணாமலை பொய்வாய் மலர்ந்திருக்கிறார்...!

குண்டூசி தொழிற்சாலைகளே
அவர் கோட் பாக்கெட்டில் குடியிருக்கும்போது...
ஒற்றைக் குண்டூசியை
திருடவேண்டிய
அவசியமென்ன இருக்கிறது..!

வெளிப்படையான ஆட்சி நடத்துவதாக
வெளிச்சம்போட்ட மோடிக்கு உச்சநீதிமன்றம்
மோடியின் தேர்தல் பத்திர திட்டத்தை
இரத்து செய்து நேற்றைய தீர்ப்பில்
சவுக்கடி கொடுத்திருக்கிறது..!

மக்களின் கண்களில்
மண்ணைத் தூவிவிட்டு
கட்சி நிதி எனும் பெயரில்
பெருமுதலாளிகளிடமிருந்து
சுருட்டப்பட்ட தொகையின் பட்டியலில்
முதலிடத்தில் மோடிஜி கட்சி என்பதற்கு
மேற்கண்ட படமே சாட்சி..!
உடம்பெல்லாம் பொய்யாக
உளறிக் கொண்டிருப்பது உமக்கு வாடிக்கையாகிவிட்டது..!

உம் உளறல்களில்
ஒன்றே ஒன்றுதான் நடந்தது..,

கூவாகம் கூத்தாண்டவர்
கோவில் திருவிழாவில்..,
மாலையில் தாலிகட்டி
காலையில் தாலியறுத்துக்கொள்ளும்
அரவாணிகளைப்போல...
அண்ணா திமுகவின் உறவை
அறுத்துக்கொண்டதுதான்..!

உம் கற்பனைக் கதறல்களை
படிக்கும்போது
என் மனதில் நினைவில் நிழலாடுவது
கலைஞரின் பேனாவிலிருந்து
வெடித்துக்கிளம்பிய வரிகள்..,

அரண்மனை நாயே..,
அடக்கடா வாயை..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

No comments:

Post a Comment