Thursday 22 February 2024

பாஸ்டிலியின் வரலாற்றை உணர மறந்தது ஏனோ..?

பாஸ்டிலியின் வரலாற்றை உணர மறந்தது ஏனோ..?

ஜனநாயகத்தின் தொட்டிலென 
ஜெகம் புகழ்ந்த இந்தியாவில் ஜனநாயகப் படுகொலையின் அரங்கேற்றம்..!

மத நல்லிணக்கத்தின்
மகுடமென பார்போற்றிய
பாரத பூமியில் 
வெறுப்பு
விதைகளின் விளைச்சல்..!

அவனிக்கு 
அகிம்சையை அளித்த 
காந்திய மண்ணில்
தடி பிடித்தவன் முடிவெடுக்கும்
பாசிச வெறியாட்டம்..!

மக்களாட்சியின் மாட்சி
மோடியின் 
மாயவலையில்
காயப்பட்டு 
கல்லறை
நோக்கிப் பயணம்..!

செக்கென்றும் 
சிவமென்றும் பாராமல் 
நக்கும் நாயைப் போல
அரசியல் சட்டத்தை
அடக்குமுறையால் 
அவமதிக்கும் அமலாக்கத்துறை..!

எதிர்க் கட்சிகளை அழிக்க..,
ஒரே நாடு...
ஒரே மொழி...
ஒரே தேர்தல்...
என உலுத்துப்போன
மன்கீ பாத்தின்
அகங்கார ஊளையோசை..!
விளைவு..,

மோடியின் 
அமலாக்கத் துறையால்
தொடுக்கப்பட்ட 
மொத்த வழக்குகள் 121..!
அதில் 
எதிர்க்கட்சித் தலைவர்களை
சிறையில் அடைத்து
தொடுக்கப்பட்ட வழக்குகள் 115..!
எதிர்க்கட்சிகள் மீது மட்டும் 
95% வழக்குகள் என்பது
அப்பட்டமான 
சர்வாதிகாரத்தின் சாயலல்லவா..!
 
நிர்வாகத்தில் 
ஆர்எஸ்எஸ் அதிகாரிகளின் ஆக்கிரமிப்பால்
பஞ்சாப் சண்டிகர்
மாநகராட்சித் தேர்தலில்
வாக்கு எண்ணிக்கையின் போது
8 வாக்குச் சீட்டுகளில்
தேர்தல் அதிகாரியே
பேனாவில் எழுதி
செல்லாத வாக்குகளாக்கி 
மோசடியாக...
பாஜக வெற்றி பெற்றதாக
அறிவித்ததை எதிர்த்து
உச்ச நீதிமன்றத்தில்
நடந்த வழக்கில்..,

நீதியரசரின் இதழ்கள் வெடித்த
சரித்திர வரிகள்...
"வாக்குச்சீட்டுகளை சிதைத்த தேர்தல் அதிகாரியை விசாரிக்க வேண்டும்.., இதை நான் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயலாகவே பார்க்கின்றேனென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் போய் சொல்லுங்கள்"
எனக் காட்டமாகக் கண்டித்தது  அதிகாரியையே என்றாலும்
அது 
மோடியின் மீது
வீசப்பட்ட சாட்டை என்பதை
உணர்வுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்..!

வரலாற்றில் 
சர்வாதிகாரம்
வாழ்ந்ததாக சரித்திரமில்லை..!
மன்னரும் மத குருமார்களும்
மக்களையடக்கி 
மரண வாசலாம்..,
பாஸ்டிலி கொடுஞ் சிறையிலடைத்து.,
சித்திரவதை செய்து
கில்லெட் எந்திரத்தால் கொன்று
குவித்ததைக் கண்டித்து.,
மக்கள் புரட்சி ஜூலை 14/1789 அன்று
எரிமலையென ஃப்ரென்ச்சில் வெடித்து.,
பாஸ்டிலி சிறைக்கூடம் தகர்க்கப்பட்டு
மன்னர் லூயியின் தலை
அதே எந்திரத்தால்
துண்டிக்கப்பட்ட நாளையே
ஃப்ரெஞ்சு மக்கள்
ஆண்டுதோறும் பாஸ்டிலி டே
எனக் கொண்டாடுகின்றனர்..!

கடந்த ஆண்டு
(ஜூலை 14 2023 அன்று)
ஃப்ரெஞ்சு அதிபர்
இம்மானுவேல் மெக்ரானின் அழைப்பை ஏற்று.,
பாஸ்டிலி டே விழாவில்
பங்கேற்று சங்கநாதம் எழுப்பி திரும்பிய பிறகும்.,
மோடி ஆட்சியின் சர்வாதிகார அடக்குமுறை தொடர்வது விந்தையிலும் விந்தை...!

வாலாஜா ஜெ. அசேன் Ex MLA

No comments:

Post a Comment