Thursday, 2 April 2026

Ranipet Environmental Crisis: Rulers Change, But the Miseries Persist!

It is a bitter truth known to all of us that Ranipet holds the 3rd spot on the list of the most polluted cities in the world. For ages, the lives of lakhs of people who rely on this land for their livelihood have been thrown into question.

Rulers may change, and officials may change, but the toxicity of Ranipet’s soil and the sorrow of its people remain unaltered. 

Here are some critical facts regarding the current dire state of our land for public awareness:

Toxic waste: Chromium in the industrial complex at Ranipet, Tamil Nadu.

1. The Venom-Spitting 'Red Category' Industries

Within the Ranipet SIPCOT complex, 16 'Red Category' industries, including Thirumalai Chemicals, Ultramarine, and Malladi, are devastating the water, land, and air by failing to manage toxic waste properly. The toxins they emit are slowly killing the lungs of the people and the fertility of this soil.

2. The Monsoon 'Toxicity Festival'

Specifically, companies like 
Thirumalai Chemicals have made it a 'habit' to illegally release highly toxic waste, stored within their premises, into rainwater drains during the monsoon season. Despite this being confirmed and fines being imposed in 2019 and 2020, the fact that this continues today highlights the weakness of the administration.

3. The Never-Ending Curse: 1.6 Lakh Tons of Chromium Waste

Approximately 1.6 lakh tons of chromium waste from the defunct 'Tamil Nadu Chromates' company have been lying in massive heaps for years without being removed. When drenched in rain, these wastes poison the groundwater, exposing the local population to deadly diseases, including cancer. The government machinery that should remove these 'Cancer Mountains' remains in a deep slumber.

4. Unaccounted Fines

Fines exceeding ₹7 Crores were imposed on defaulting industries by the Central and State Pollution Control Boards. Was this amount ever collected? If so, was it used to remediate the affected lands? There is absolutely no information regarding this in the public domain.

Our Rights: Demands to the Government!

The struggle to reform the administration and protect the people's right to life is now a necessity of the times. These are the people's demands:

1.Strict Audit: The Pollution Control Board must immediately conduct a comprehensive audit of all toxic industries operating in Ranipet.

2.Permanent Closure: Immediate action must be taken to permanently shut down industries that continuously violate regulations, without any recommendations for leniency.

3.Removal of Chromium Waste: Measures must be taken on a war footing to relocate the 1.6 lakh tons of stagnant chromium waste to a safe location and remediate the soil.

4.Clarity on Fund Utilization: The imposed fines must be collected immediately and utilized to restore the affected water bodies and land.

Conclusion

It is our foremost duty to rescue Ranipet, which has become unfit for human habitation, from these toxins. If the concerned administration and rulers fail to take appropriate action, it is imperative to launch sustained protests to safeguard the people's right to life.

Ranipet is not just a forest of factories; it is land where humans must live!

The failure to take action to rescue Ranipet from this severe pollution is a downfall in the nation's ethics and justice! Let this reach the ears of those concerned, at least during this election season!

P.Sekar, 
Advocate

Source: Complaint petition by Walaja J. Hasean (Ex-MLA) and Pollution Control Board reports.

இராணிப்பேட்டை சுற்றுச்சூழல் கேடு: ஆள்பவர்கள் மாறினாலும் அவலங்கள் தொடர்கின்றன!

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இராணிப்பேட்டை மூன்றாம் இடத்தில் இருப்பது நாம் அனைவரும் அறிந்த கசப்பான உண்மை. பன்நெடுங்காலமாக இந்த மண்ணையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

ஆள்பவர்கள் மாறலாம், அதிகாரிகளும் மாறலாம்; ஆனால் இராணிப்பேட்டை மண்ணின் நச்சுத்தன்மையும், மக்களின் துயரமும் மட்டும் மாறுவதே இல்லை. நம் மண்ணின் தற்போதைய அவல நிலை குறித்துச் சில முக்கிய உண்மைகளை இங்கே பொதுமக்களின் பார்வைக்கு:

நச்சுக் கழிவு: தமிழ்நாடு, இராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் குரோமியம்.

1. நச்சைக் கக்கும் 'சிவப்பு வகை' ஆலைகள்

இராணிப்பேட்டை சிப்காட் (SIPCOT) வளாகத்தில் இயங்கும் திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மரைன், மல்லாடி உள்ளிட்ட 16 'சிவப்பு வகை' (Red Category) ஆலைகள், நச்சுக் கழிவுகளை முறையாகக் கையாளாமல் நீர், நிலம் மற்றும் காற்றைப் பாழாக்கி வருகின்றன. இவை வெளியேற்றும் நச்சுக்கள் மக்களின் நுரையீரலையும், இந்த மண்ணின் செழிப்பையும் மெல்ல மெல்லக் கொன்று வருகின்றன.

2. மழைக்கால 'நச்சுத் திருவிழா'

குறிப்பாக, திருமலை கெமிக்கல்ஸ் போன்ற நிறுவனங்கள் மழைக்காலங்களில் ஆலைக்குள் தேக்கி வைத்திருக்கும் கொடிய நச்சுக் கழிவுகளை, மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாகத் திறந்து விடுவதை ஒரு 'வாடிக்கையாகவே' கொண்டுள்ளன. கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இது உறுதி செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டும், இன்று வரை இந்நிலை தொடர்கிறது என்பதுதான் நிர்வாகத்தின் பலவீனம்.

3. தீராத சாபம்: 1.6 லட்சம் டன் குரோமியக் கழிவுகள்

மூடிக்கிடக்கும் 'தமிழ்நாடு குரோமேட்ஸ்' நிறுவனத்தின் 1.6 லட்சம் டன் குரோமியக் கழிவுகள் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன. மழையில் நனையும் இந்தக் கழிவுகள் நிலத்தடி நீரை நஞ்சாக்கி, இப்பகுதி மக்களைப் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு ஆளாக்குகின்றன. இந்தப் 'புற்றுநோய் மலைகளை' அகற்ற வேண்டிய அரசு இயந்திரம் இன்னும் தூக்கத்தில் இருக்கிறது.

4. கணக்கில் வராத அபராதங்கள்

விதிமீறல்களில் ஈடுபட்ட ஆலைகளுக்கு மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் விதித்த சுமார் ரூ.7 கோடிக்கும் மேலான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதா? அவ்வாறு வசூலிக்கப்பட்டிருந்தால், அந்தத் தொகை பாதிக்கப்பட்ட நிலங்களைச் சீரமைக்கப் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து எவ்விதத் தகவலும் பொதுவெளியில் இல்லை.

நமது உரிமை: அரசுக்கு விடுக்கும் கோரிக்கைகள்!

நிர்வாகத்தைச் சரி செய்வதற்கான போராட்டமும், மக்களின் வாழ்வுரிமையைக் காப்பதும் இப்போது காலத்தின் கட்டாயம்.

மக்களின் கோரிக்கைகள் இவைதான்:

1.கறாரான ஆய்வு: இராணிப்பேட்டையில் இயங்கும் அனைத்து நச்சு ஆலைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனே முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

2.நிரந்தர மூடல்: விதிமுறைகளைத் தொடர்ந்து மீறி வரும் ஆலைகளை எவ்விதப் பரிந்துரையுமின்றி நிரந்தரமாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.குரோமியக் கழிவு அகற்றம்: தேங்கிக் கிடக்கும் 1.6 லட்சம் டன் குரோமியக் கழிவுகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அகற்றி, மண்ணைச் சீரமைக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.பயன்பாட்டுத் தெளிவு: விதிக்கப்பட்ட அபராதத் தொகையை உடனடியாக வசூலித்து, அதன் மூலம் பாதிக்கப்பட்ட நீர்நிலைகளையும் நிலத்தையும் மீட்க வேண்டும்.
 
முடிவுரை

மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிட்ட இராணிப்பேட்டையை நச்சுக்களில் இருந்து மீட்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். சம்பந்தப்பட்ட நிர்வாகமும், ஆட்சியாளர்களும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், மக்களின் வாழ்வுரிமையைக் காக்கத் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது காலத்தில் கட்டாயம்.

இராணிப்பேட்டை என்பது வெறும் தொழிற்சாலைகளின் காடு அல்ல; அது மனிதர்கள் வாழ வேண்டிய மண்!

இராணிப்பேட்டை மோசமான மாசில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நாட்டின் நெறிமுறையிலும் நியாயத்திலும் ஒரு வீழ்ச்சி!

இந்தத் தேர்தல் காலத்திலாவது, இது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளை எட்டட்டும்!

பொன்.சேகர்
வழக்கறிஞர்

செய்தி ஆதாரம்: வாலாஜா ஜெ.அசேன் (Ex.MLA) அவர்களின் புகார் மனு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகள்.

Friday, 27 March 2026

இராணிப்பேட்டை தொகுதியின் விடியலுக்கு வாலாஜா ஜெ.அசேன் சட்டமன்ற உறுப்பினராவது 'காலத்தின் கட்டாயம்'!

முன்னுரை

ஒரு ஊரின் வரலாறு சிதைக்கப்படும்போதும், அதன் இயற்கை வளம் நஞ்சாக்கப்படும்போதும், அந்த மண்ணை மீட்டெடுக்க ஒரு தார்மீகக் குரல் தேவைப்படுகிறது. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியின் பிரதிநிதியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ. அசேன் (BA, BL) அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வெறும் அரசியல் விருப்பம் அல்ல; அது அந்த மண்ணின் காலத்தின் கட்டாயம்.
1. முதல் நகராட்சியின் பெருமையை மீட்டெடுக்க...

1866-ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமை வாலாஜாபேட்டைக்கு உண்டு. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகராட்சியின் தலைவராக (Chairman) சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் திரு. அசேன் அவர்களுக்கு உண்டு. நகராட்சி நிர்வாகத்தில் அவர் காட்டிய நேர்மையும், தொலைநோக்குப் பார்வையும் இன்றும் மக்களால் பேசப்படுகிறது. இன்று அந்தப் பெருமை மங்கி வரும் நிலையில், அதை மீட்டெடுக்க அனுபவம் வாய்ந்த ஒரு நிர்வாகி தேவை.

2. கவிஞர், வாசகர், தமிழ் மொழி ஆர்வலர்: ஒரு பண்பாட்டு அடையாளம்

அரசியல் களத்தைத் தாண்டி, திரு.அசேன் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், தீவிர வாசிப்பாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர். "முத்தமிழ் சுவைச் சுற்றம்" என்கிற இலக்கிய அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் இலக்கிய விழாக்களை நடத்தி, இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். அவரது ஆழமான கவிதைகளை “நீதிக்கான குரல்” வலைப்பக்கத்தில் காணலாம். மேலும், ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் விழாவை முன்னின்று நடத்தி, சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகிறார்.

3. ஒரு இளைஞனைப் போன்ற களப் போராட்டங்கள்!

வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், இன்றும் ஒரு இளைஞனைப் போலத் துடிப்போடு களத்தில் நிற்பவர் திரு. அசேன்.

தேசியப் பிரச்சினைகள்: CAA, NRC மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற விவகாரங்களில் ஜனநாயகத்தைக் காக்க வீதியில் இறங்கிப் போராடியவர்.

உள்ளூர் பிரச்சினைகள்: ஊழல் முறைகேடுகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலை மாடுகளைக் கட்டுப்படுத்த நகராட்சிக்கு எதிராகப் போராட்டம் என மக்களின் அன்றாடத் துயர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

சுற்றுச்சூழல் போர்: உலகின் 3-வது மாசடைந்த நகரம் - ஒரு அபாய எச்சரிக்கை!

இன்று இராணிப்பேட்டை உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. குரோமியக் கழிவுகள் மற்றும் ஆலைகளின் நச்சுக்கழிவுகளால் நிலத்தடி நீர் நஞ்சாகி, மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாகச் சமரசமின்றிச் சுற்றுச்சூழல் போரை முன்னெடுத்து வருபவர் திரு.அசேன்.

அமைச்சர்களுக்கும், மத்திய அரசுக்கும் தரவுகளுடன் கடிதம் எழுதியதோடு, நேரடியாக டெல்லிக்குச் சென்று சுற்றுச்சூழல் அதிகாரிகளைச் சந்தித்து, நச்சு ஆலைகளுக்குக் கோடி கணக்கில் அபராதம் விதிக்கக் காரணமாக இருந்தவர்.

இந்தச் சாபக்கேட்டைத் துடைத்தெறிய, ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவருக்கு அதிகாரம் கிடைப்பது காலத்தின் தேவை.


4. 1989-ல் நிகழ்ந்த ‘மக்களின்’ வெற்றி!

1989 சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய அரசியல் சூழலில் அவருக்குத் தொகுதி ஒதுக்கப்படாதபோதும், மக்களின் பேராதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கட்சிச் சின்னம் இல்லாமலேயே ஒரு மாபெரும் அலையை வென்று காட்டிய அவர், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத்தலைவராக (State Vice President) உயரிய பொறுப்பில் இருந்து வழிநடத்தி வருகிறார்.

5. ஏன் அவர் திமுக கூட்டணி வேட்பாளராக வேண்டும்?

அதிமுக கூட்டணியில் இத்தொகுதி தமாகா-விற்கு (தாமரை சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது, மதச்சார்பற்ற வாக்காளர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், சிறுபான்மையினர் வாக்குகள், திமுகவின் வாக்கு வங்கி மற்றும் அசேனின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகிய மூன்றுமே இணைந்து ஒரு மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்யும்.

முடிவுரை

"நல்லவை அல்லவைகளை சீர்தூக்கிப் பார்க்கிற" ஆற்றல் கொண்ட இராணிப்பேட்டை மக்கள், இன்று ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார்கள். வரலாற்றுப் பெருமை கொண்ட ஒரு நகரை, நச்சுக்கழிவுகளின் பிடியிலிருந்து மீட்கவும், பண்பாட்டுச் செழுமையைப் பாதுகாக்கவும் தெரிந்த ஒரே ஆளுமை திரு. அசேன் அவர்களே!

இராணிப்பேட்டையின் விடியலுக்காகவும், வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்திற்காகவும் திரு.வாலாஜா ஜெ.அசேன் சட்டமன்றத்திற்குச் செல்வதே அந்த மண்ணிற்குச் செய்யும் உண்மையான நீதியாகும்!

பொன்.சேகர், BE. ML. MPhil,
(மேலாளர், பணி ஓய்வு, BHEL, Ranipet)
வழக்கறிஞர்

Friday, 16 January 2026

ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!

"ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!" - எனும் கிராமத்துப் பழமொழிக்கேற்ப, ஊழலின் உச்சம் தொட்டவர்கள் இன்று உத்தமர் வேஷம் போடுகிறார்கள்!

'ஆட்சியில் ஊழல், ஊழல், ஊழல்' என்று ஊர் ஊராகப் பல்லிளித்துப் பேசி வருகிறார் பழனிசாமி..!

  • அடையாளம் தெரியாமல் இருந்த அக்ரகாரச் சிறையை, அகில இந்தியாவிற்கும் அடையாளம் காட்டியது யார் ஆட்சி?

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கோட்டைவிட்ட பிறகு, நீதிமன்ற வளாகங்களில் உலாவரும் முன்னாள் அமைச்சர்கள் எந்தக் கட்சி?

  • குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிடலாமா?

அங்கிங்கெனாதபடி ஊழல் செய்ததால் அமலாக்கத் துறையிடம் மாட்டி, அமித்ஷாவிடம் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துச் சோரம் போனவர்களா வீரம் பேசுவது? அமித்ஷாவின் உடல் அசைவுக்கு ஏற்ப அம்மிக்கல்லாய் உருளும் அர்த்தநாரிகள் மீண்டும் ஆளக் கனவு காண்பதா, ஊர்ந்து ஊர்ந்து சென்று பாத பூஜை நடத்திப் பதவி பெற்றவர்!

தியாகக் கனலில் புடமிடப்பட்டு, பொதுநலத்தில் தன்னை அர்ப்பணித்து, தமிழகத்தின் வரலாற்றையே மாற்றி, நிர்வாகத் திறனில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் தலைநிமிரச் செய்தவர் நம் முதல்வர். தமிழ் மணம் கமழப் புத்தாண்டை மலரச் செய்த வித்தகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை, இனப்பற்றற்ற, மொழிப்பற்றற்ற பாதம் தாங்கிகள் வீழ்த்த நினைப்பது துரோகத்தின் உச்சகட்டம்!

எம்.ஜி.ஆர் அவர்களாலும், அம்மையார் ஜெயலலிதாவாலும் இரும்புக் கோட்டையாகக் கட்டியமைக்கப்பட்ட அதிமுகவை மணல் கோட்டையாக்கிச் சிதைத்து, விழுதுகளையெல்லாம் வெளியேற்றி, கட்சியை அடமானம் வைத்தது போல் தமிழகத்தின் உரிமைகளையும் அமித்ஷாவிடம் அடமானம் வைக்க ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறீர்கள்!

தங்களின் பேச்சு "கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் காட்டுவேன்" என்று கூறுவதைப் போன்ற வெற்றுப் பேச்சு! வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது!

- வாலாஜா அசேன், முன்னாள் MLA