தடம் மாறியதால்
தப்புத் தாளங்கள்!
அக்கா... அக்கா..
கவர்னர் அக்கா..நீர்
சொக்காய் மாற்றிக் கொண்டதால்
பக்கா தமிழச்சி என்பதனை
மறந்தனை போலும்!
இயற்கையை வெல்ல..
செயற்கையால் முடியுமா?
தண்ணீர் வடியவில்லை
எனக் கண்ணீர் விட்டீர்..
கடல்,
புயல் சீற்றத்தால் 
பொங்கும் பொழுது 
வெளிநீரை உள்வாங்காது..
நீக்குப் போக்குத் தெரியாமல்
நினைவிழந்து பேசுவதோ?அதிகாரம் 
அறிவை
மழுங்கச் செய்கிறதோ?
கூவத்தைப் பற்றி
கூவுகிறீர்..
கங்கையைச் சுத்தப்படுத்தும்
சவடால் என்ன ஆனது?
சுத்தமாக மறந்தனையோ?
ஆறுகள் இணைப்போம்
ஆர்ப்பாட்ட அறிவிப்பு
அடங்கிப் போனதேன்?
அடுப்பு ஊத 
நீர் போவதில்லை
அதனால் உமக்கு
சிலிண்டர் கவனம் வருவதில்லை!
அரசு வாகன பவனியால்
உமக்குப் பெட்ரோல்
விலை உயர்வு தெரியாது?
எத்தனை சொன்னாலும்
உமக்குச் சித்தம் தெளியாது!
காரணம்... நீர்
பித்தன் தலையின்
பிறை நிலவு!
பிதற்றுவது.. 
சேர்ந்த இடம் தந்த 
சீதனச் சொத்து...!
வாலாஜா J.அசேன் Ex.MLA., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்

 
No comments:
Post a Comment