Friday 2 June 2023

மோடியின் வீழ்ச்சியை செங்கோல் காக்குமா?

மக்கள் ஆட்சி மாள., 
மன்னர் ஆட்சி மீள.., 
செங்கோலின் கால்கோள் விழா..!

தற்புகழ்ச்சி தம்பட்ட மன்னன்-மோடிஜி 
சரிந்து விட்ட செல்வாக்கை சரி கட்ட... 
புதிய நாடாளுமன்றத்தில் 
பழைய செங்கோலின் 
புதிய அரங்கேற்றம்..!

தென்னாட்டு மண்ணில் 
தலைதெறிக்க ஓட விட்ட 
துயரக் காட்சியை 
துடைத்தெறிய துணையானதோ தமிழ்நாட்டுச் செங்கோல்?

அன்று 2004ல் 
அன்னை சோனியா காந்தி 
பிரதமராவதை எதிர்த்த
பாசிசக் கூட்டத்தை எதிர்த்து, 
சோனியா காந்திக்கு 
ஆதரவாகக் குரல் கொடுத்த 
லாலு பிரசாத் யாதவ் அவர்களையும்., 
இணை அமைச்சர் ஆர்.வேலு அவர்களையும் கடந்த 18-09-2004 அன்று 
வாலாஜாப்பேட்டைக்கு அழைத்து வந்து பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தி 
லாலுவுக்குத் தங்கக் கிரீடம் சூட்டியதோடு 
தங்கச் செங்கோலும் வழங்கி 
கௌரவித்தோம்!
விளைவு... 

அரசியல் சித்தர் லாலுஜி, 
நிர்வாகத் சித்தர் ஆர்.வேலு ஆகியோரால் வாலாஜாபேட்டை இரயில் நிலையம் மறுமலர்ச்சி கண்டது!

ஆண்டுக்கு 
சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டிக் கொண்டிருந்ததை மாற்றி 
சுமார் நாலு கோடி ரூபாய் வரை 
உயரும் அளவுக்கு 
இரயில் பயணிகளின் போக்குவரத்தை மிகைப் படுத்தினார்கள்!

புதிதாக, 
நகரி-திண்டிவனம் 
இணைப்புப் பாதைக்காக 
லாலுவும்-வேலுவும்
அன்று
திட்டம் தீட்டிச் செயல் படுத்தினார்கள்.

இடையில் ஆட்சி மாற்றம்,
மோடி பிரதமரானதால்-திட்டம் 
முன்னெடுக்கப் படாமல் 
முடங்கிப் போனது!

அன்று, 
வாலாஜாப்பேட்டையில் 
வழங்கப்பட்ட செங்கோலால் வளர்ச்சி!
இன்று, 
பாராளுமன்றத்தில் செங்கோல்!
மோடியின் வீழ்ச்சியை 
மறைக்கும் முயற்சி..!

வாலாஜா ஜெ. அசேன். Ex MLA


No comments:

Post a Comment