Sunday 18 June 2023

அமலாக்கத்துறை அகோரிகளின் பேயாட்டம்!

அமலாக்கத்துறை அகோரிகளின் பேயாட்டம்!

மணிப்பூரின் மரண ஓலம்-உலக ஊடகங்களில் ஒலித்த போதும்...
ஒரு வார்த்தையும் வெளியிடாத 
உரியவரின் மௌனம்?
மௌனங்களின் மகுடம்! 
கவனமெல்லாம்...
தலைவணங்காத் தமிழகத்தின் மீது!

விளைவு...

இ.பி.எஸ் அமைச்சரவையின் அங்கம்... 
செந்தில் பாலாஜி மீது-அன்று 
தொடரப்பட்ட வழக்கு
எட்டாண்டு கழித்து 
அவசர நடவடிக்கையாகப் பாய்கிறது!
இதய வலியால் தாக்குண்டவரை 
பிராண்டி எடுத்தது 
அகோரிகளின் பேயாட்டம்!

கர்நாடகாவில்,
தரைதட்டிப்போன கலத்தில் 
தஞ்சம் அடைந்திருந்தால்-செந்தில் புடம்போட்ட தங்கமென 
ஜொலித்திருப்பார்!

இருபதாயிரம் கோடி ரூபாய்...
மொரீசியசிலிருந்து அதானிக்கு...
(Mauritius to Adani) 
அதன் மர்மம்-அடைகாக்கப்படுவது...?
அமலாக்கத்துறை அகோரிகளின்
நினைவில் மறந்து போனதோ?
மௌனம் சாதித்தால் மாமனிதரோ?

மோடியின் கைத்தடிகள் 
'டாடி'யின் மகுடி இசைக்கு 
பாம்பாக மாறி-முதல்வர்
ஸ்டாலின் மீது சீறுகின்றன!
தன் ஆட்சியில் நடந்த தவறைத் 
தட்டிக் கேட்காமல்
முதல்வர் ஸ்டாலின் மீது-தற்போது பம்முகிறார் பழனிச்சாமி!

செந்தில் பாலாஜி மீது  
தொடரப்பட்ட வழக்குக்காக
ஸ்டாலின் பதறுவதாக 
இவர் கதறுகிறார்! 
இவரது ஆட்சியில் 
தலைமைச் செயலகத்தில் 
சோதனை நடந்தபோது-தன்னுடைய 
ஒன்பது வாசல்களையும் மூடிக்கொண்டு 
ஒடுங்கி உட்கார்ந்திருந்தார்!

ஆனால் ஸ்டாலினோ  
சிறைச் சாலையின் சிம்புட்பறவை 
சும்மா இருக்குமா? 
பதறி எழுந்து 
எதிரியை பதம் பார்த்தார்!

தரையில் தவழ்ந்து 
காலைப் பிடித்து 
அரியணை ஏறியவரல்ல,
களம் பல கண்டு 
காராகிரகத்தில் அடைபட்டு 
சங்கத் தமிழின் மங்காப் புகழுக்கு 
தங்க விளக்காகி 
அரியணை ஏறியவர்தான் 
முதல்வர் ஸ்டாலின்!

ஆம்... பதறினார்!
போர்ப் பரணி பாடினார்.. 
பேதைகளுக்கு-இதில் 
ஏன் உபாதை?

வாலாஜா ஜெ. அசேன் Ex. MLA.,




No comments:

Post a Comment