Monday 3 April 2023

முற்றுகைப் போராட்டம்!

முற்றுகைப் போராட்டம்!

இடம்: இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

நாள்: 05.04.2023, புதன்கிழமை காலை 10 மணி அளவில்
*****
அந்நிய நாடுகளில் 
ஆளில்லா ஆலைகளின்
20 ஆயிரம் கோடி ரூபாய் 
அதானயிடம் அடைக்கலமானது எப்படி?
அதானிக்கும் மோடிக்கும் உள்ள உறவு என்ன?

1914 இல்,
ஜெய்ஹிந்த் செண்பகராமன் 
மதரசாப் பட்டினம் மீது 
எம்டன் குண்டு வீசினார்!

2023 இல்,
அன்னை பாரதத்தின் 
அருந்தவப் புதல்வன் 
இராகுல் காந்தியோ
கபடவேடதாரி மோடியின் 
கருப்புப் பணம் மீது 
ஏவு’கணை’ வீசி உள்ளார்!

பி.ஜெ.பி - அதிகார வர்க்கம் அரண்டுபோனது!
மோடிஜி அதிகார போதையின் 
அடித்தளமே ஆட்டம் கண்டது!
மற்றவர்களைக் குற்றவாளியாக்கி 
மனம் குளிர்ந்த மோடிஜி
இன்று,
குற்றச் சூறாவளியில் 
சிக்கித் தவிக்கிறார்!
உலகப் பார்வையில்
மோடியின் பிம்பம் 
உருக்குலைந்து நிற்கிறது!

திசை திருப்பும் முயற்சியாக,
பொய் வழக்குப் புனைந்து 
அஞ்சா நெஞ்சன் 
ஆற்றல் மறவன் 
தியாகப் பரம்பரையின் 
திசைகாட்டும் கலங்கரை விளக்கு!

சிறைக்கோட்டம் பூந்தோட்டமென
அடக்கு முறையை எதிர் கொண்ட
அடலேறு இராகுல் காந்தி அவர்களை 
நீதிமன்றம் வாயிலாக
இரண்டாண்டு சிறைப் படுத்தி
பழிவாங்கத் துடிக்கிறது!

நீதி கேட்டு முற்றுகையிவோம்! 
மோடிஜியின் ஆட்சிக்கு 
முடிவுரை எழுதுவோம்!
திரண்டு வா!....வா!

தியாகத் தலைவன் இராகுல் காந்தி பாசறை,
வாலாஜாப்பேட்டை

No comments:

Post a Comment