Thursday 6 April 2023

CBI வைர விழாவில்…. மோடிஜியின் இதழ்கள் உதிர்த்த முத்துக்கள்!

"ஜனநாயகம் மற்றும் நீதிக்கு, 
ஊழல் மிகப் பெரியத் தடையாக உள்ளது. 
ஊழலிலிருந்து நாட்டை விடுவிப்பதே
மிக முக்கியக் கடமை!" – மோடி

இது,
BJP ஆட்சியில், ஊழலை ஒழிக்க 
முடியவில்லை…என்பதற்கான
மோடிஜியின், ஒப்புதல் வாக்குமூலம்!

ஆட்சிக்கட்டிலில் ஒன்பதாண்டுகள்,
ஊஞ்சலில் ஆடி…., உய்யலாலா பாடி..
எதிர்க்கட்சிக்கார்களைப் பழி … வாங்கி 
உலகம் முழுவதும் ஒய்யார பவனி 
நடத்திய பிறகு….,ஊழல் குறித்து….
உதித்ததோ ஞானோதயம்….மோடிஜிக்கு?

”அம்பானி பணம் 
20 000 கோடி ரூபாயின்
நதி மூலம், ரிஷி மூலம் யாதோ?”
என,
இராகுல் காந்தி தொடுத்தக் 
கேள்விக் கனைகளால் விழி பிதுங்கி 
அம்மணமாய்…அம்பலமான பிறகு
மோடிஜி மீதே …
ஊழல் மேகம் குடை பிடிக்கிறது!


“மங்கை சூதானால் கங்கையில் குளிக்கலாம்…. 
ஆனால், 
அந்தக் கங்கையே சூதானால்….?”
காரைக்குடி கவிஞனுக்கு 
உங்கள் பதில்தான் என்ன?


மன்கிபாத்… எனும் பயனில்லாப் பேச்சு!
அது…மக்களுக்கோ புரிஞ்சு போச்சு
நீங்கள் 
மூட்டை கட்டும் காலம் வந்தாச்சு!
”விடியுமா?” என்பதே
இன்றைய மக்களின் 
ஏக்கப் பெருமூச்சு!

ஊழலிலிருந்து….நாட்டை மீட்க
ஆட்சிக் கட்டிலிலிருந்து…மோடியை அகற்ற 
வேண்டும் என்பதே…மக்களின் 
ஏகோபித்தப் பேச்சு!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,

No comments:

Post a Comment