Sunday 30 April 2023

குருக்ஷேத்திர யுத்தத்தின் முன்னோட்டம்தான் கர்நாடகத் தேர்தல்!

 2024 இல் நடக்கப் போகும் குருக்ஷேத்திர யுத்தத்தின் முன்னோட்டம்தான் கர்நாடக தேர்தல்!

நள்ளிரவில் நாட்டுக்கு  விடுதலை..!
சுதந்திர இந்தியாவின் கையில் பிச்சைப் பாத்திரம்..!

அன்று,
கோமான் நேருமகான்
நெஞ்சில் பூத்த திட்டங்களால் இந்தியா பெற்றது அட்ஷயப் பாத்திரம்!
இந்தியத் தீபகற்பத்தின் வளர்ச்சியை உலகமே வியந்து பார்த்தது!

இன்று...
மதவெறி போதையூட்டி
பதவி போகத்தில் புரளும் ஒரு கூட்டம் நம்மை
அடிமையாக்கிவிட்டது!

'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற பொய்யாமொழிக்கு புகலிடமாக்கிவிட்டது!

கொலைக் குற்றவாளிகளுக்கு விடுதலை...
கற்பைச் சூறையாடியவர்களுக்கு விடுதலை...
வங்கி மோசடியாளர்களுக்கு விடுதலை...

₹20,000 கோடி மறக்க முடியுமா..!
கொள்ளையர்களை அடையாளம் காட்டியவருக்கு மட்டும் சிறைச்சாலை...

விநோதம்... விநோதம்... இதுதானோ கூர்ஜ்ஜரத்தின் நீதி...
பாரதத்தின் மேல் படர்ந்திருக்கும் அழியாப் பழி..!

ஆண்டப் பரம்பரையடா..!
விடுதலை வேள்வியில்
மாண்ட பரம்பரையடா..
அடங்கிக் கிடப்பதோ..?
அறிவீனம்... அறிவீனம்..!

தியாகத்தின் தாயகம் தேசிய காங்கிரஸ் அல்லவோ..!

தோளை உயர்த்தடா...
தியாகப் பரம்பரை வழிவந்த
நம் தலைவன் ராகுலை வாழ்த்தடா!

உரிமை இழந்து ஊழியம் செய்து வாழ்வதைவிட உயிரைக் கொடுப்போம்..!
கர்நாடகம் அழைக்கிறது வா..!

களம் காண்போம்..! கர்நாடகத்தை மீட்டெடுப்போம்..!
வெற்றிவாகை சூடுவோம்..!

2024 குருக்ஷேத்திர
யுத்தத்திற்கு முன்னுரை வரைவோம்!
வா... வா... வா..!

வாலாஜா ஜெ.அசேன், Ex. MLA,



No comments:

Post a Comment