Saturday 2 March 2024

புட்டிப்பால் அண்ணாமலையை நம்பி மனப்பால் குடிக்கும் மோடிஜி!

புட்டிப்பால் அண்ணாமலையை நம்பி மனப்பால் குடிக்கும் மோடிஜி..!

இது தமிழகம்..!
பகுத்தறிவின் பிறப்பிடம்..!
சுயமரியாதையின் விளைநிலம்..!
சுந்தரத் தமிழ் உணர்வின் எரிமலை..!

அரசு விழாக்களில் 
உங்களின்
அரசியல் ஆணவப் பேச்சான
'அழிப்பேன்...
ஒழிப்பேன்...
இல்லாமல் செய்வேன்...'
இவை அனைத்தும்
சர்வாதிகாரத்தின் சொல்லாடல்.
பாசிசத்தின் பக்க வாத்தியங்கள்..!

உங்களுக்கு முன்னே
பதினான்கு பிரதமர்கள்
பாரத நாட்டின் 
ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தார்கள்..!
பிரதமர் பதவிக்குப்
பெருமை சேர்த்தார்கள்..!
"வேற்றுமையில் ஒற்றுமை"
உயர்ந்து நிற்பதைக் கண்டு
உலகம் எழுந்து நின்று
கைத்தட்டிப் பாராட்டியது..!

இன்று,
உங்கள் ஆட்சியில்...
'ஓட்டு மெஷினும்..,
நோட்டு மெஷினும்'
உங்கள் கையில் என்பதால்
மக்கள் பிரதிநிதிகளை
சந்தைச் சரக்காக்கி
வேற்றுமைகளை விதைக்கின்றீர்..!
ஜனநாயகப் படுகொலை செய்யும்
உங்கள் பாதகச் செயல்களால்
உலக அரங்கில்
இந்தியாவிற்கேத் தலைகுனிவு..!

ஏற்கெனவே..,
'காங்கிரஸ் இல்லாத இந்தியா'
என்ற 
உங்கள் பாசிச முழக்கத்தை
சிங்க நடையால் 
மக்கள் இதய சிம்மாசனத்தில் கொலு வீற்றிருக்கும் 
ராகுல் காந்தியின் 
காலில் பட்டுதிர்ந்த தூசானது..!

தற்போது...
கம்பங்களைக் கண்டால்
காலைத் தூக்கிச் சிறுநீர் கழிக்கும்
ஜீவனைப்போல.,
மைக்கைக் கண்டால்
திமுகவை இழிவாகப் பேசிவருவது
புட்டிப்பால் அண்ணாமலைக்கு
வாடிக்கையாகி விட்டது..!
தமிழகம் வந்தால் 
மோடிஜியின் நாவும்
நாலாந்திர அரசியல்வாதியின்
நாக்குபோல நடனமாடுகிறது..!

2016 ஆம் ஆண்டு,
ஜெயலலிதாவின் ஆட்சிபற்றி..,
'தமிழகத்தில் "லஞ்ச லாவண்யம்"
தலைவிரித்தாடுகிறது..,
இந்த லஞ்சத்தினால் தமிழகமே 
முற்றிலும் பாதித்துப் போயிருக்கிறது'
என ஓசூரில் பேசினார்..!
அதை மறந்து,
தற்போது தமிழகம் வந்து
ஜெயலலிதாவின் ஆட்சி பற்றிப்
புகழாரம் சூட்டுகிறார்..!

தமிழ் நாட்டுத் தேர்தல் 
வாக்குப் பெட்டிகளில்
'நோட்டா'வால் தோற்கடிக்கப்பட்ட
நீங்கள்...
'திமுக இனி இருக்காது என்றும்..,
தமிழகத்திலிருந்து முற்றாக
அழிக்கப்படும் என்றும்...
இனி தேடினாலும் திமுகவைக்
காணமுடியாது' என்றும்
திமுகவிற்கு எதிராக 
தான் வகிக்கும் பிரதமர் பதவியின் தகுதிக்குக் களங்கமுண்டாகும்
வகையில் திருநெல்வேலியில்
தரம்தாழ்ந்து பேசி இருக்கிறார்..!

பிரதமர்களை உருவாக்கி
பெருமை 
பெற்ற அரசியல் சாணக்கியரும்.,
சுயநலமற்ற சொக்கத் தங்கம்.,
தனக்காக சொத்து சேர்க்காமல்
தன்னையே சொத்தாக தமிழகத்துக்குத்
தந்த அருந்தவப்புதல்வனான காமராஜர் வாழ்ந்த புண்ணிய பூமி தமிழகம்..!

தன் மண்டைச் சுரப்பால்
பகுத்தறிவு பயிர் வளர்த்த பகலவன்
பெரியாரின் விளைநிலமிது..!

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை
தமிழனின் சொத்தாக்கி
சுந்தரத்தமிழால் சொக்கவைத்து
சாமான்யனையும் அரசியல்வாதியாக்கிய
பேரறிஞர் அண்ணாவின் மண்ணிது..!

கடல்கோள்கொண்ட 
பூம்புகாரையே மீட்டு 
பூமிக்குத் தந்த வித்தகன்.,
மங்காப் புகழ்கொண்ட தமிழன்னைக்கு 
செம்மொழி மகுடம் சூட்டிய சிங்கத்தமிழ்
மறவனின் தாலாட்டில் வளர்த்தெடுத்த திமுகவை 
வீழ்த்த நினைப்பது...,
அது மோடிஜியின் பகல்கனவு..!

'கலைஞரைவிட ஸ்டாலின் ஆபத்தானவர்' என்று நீங்கள் சொன்னதையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன்..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

No comments:

Post a Comment