Saturday 8 July 2023

நீதியே! நீ இன்னும் இருக்கின்றாயா?



நீதியே...நீ இன்னும்
இருக்கின்றாயா...? - இல்லை,
நீயும்,
கோத்ரா கொலைக் களத்தில்
மாண்டு போனாயா...?

குற்றவாளிகளோ
கோபுரக்கலசங்களில்...
குரல் கொடுப்பவரோ
தண்டனை வாசலில்....
தருமத்தின் நெஞ்சில்
ஈட்டியைப் பாய்ச்சுவதோ...?
 
ஏவி விடப்பட்டு,
வேட்டைக்காக 
வட்டமிடும் 
வல்லூறுகளின்
பொய்வழக்குத் 
தாக்குதலை
எதிர்கொள்ள...
நீதியின் நிழலை 
நாடினால்- அங்கேயும்
அநீதியின் ஆர்ப்பரிப்பு...!
 
கோடானகோடி
நெஞ்சங்களில்
கொலு வீற்றிருக்கும்
கோமகன் ராகுலை
வஞ்சனையால்
வீழ்த்த முயல்வதோ?
 
ஏழிரண்டாண்டுகள்,
பாதுகைகள்
நெறிதவறாமல்
ஆண்டபூமியடா..!
பாதுகை மன்னனின்
பெயரை
உச்சாடனம் செய்து
தேர்தல் பரணி பாடி
பதவி பிடித்து
பேயாட்சியை
அரங்கேற்றுவதோ...!
 
2014-இல்
ஆரம்பமானது
குஜராத்துக்குள்ளே...
2024-ல்
ஆடி 
அடங்கப் போவது
டெல்லிக்குள்ளே.!
ஆராய்ந்து பார்
மனதுக்குள்ளே…!
ஆத்திரம் கொள்ளாதே
நெஞ்சுக்குள்ளே...!
 
வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,

No comments:

Post a Comment