Wednesday 26 July 2023

துஞ்சியது போதும்! விஞ்சி எழு!

மணிப்பூர் மண் 
மயான பூமியாகத்
துடிக்கும் போது 
அரசியல் சாசன செயல்பாட்டில் 
மோடியின்
மௌன விரதம்..!

பாராளுமன்றத்தை
சந்திரமுகி - பட
பேய் மாளிகையாக
நினைத்து அஞ்சுகிறார்..!

கேள்வி கேட்பார்கள் 
இல்லையென்றால் 
கெட்டிமேளம் 
கொட்டுவது போல 
முழக்கமிடும் மோடி
பாராளுமன்றமென்றால்
பதுங்கி ஒதுங்குவது
ஏன்..?

பஞ்சசீலம் 
போதித்த பூமி - இன்று
பஞ்சமா பாதகர்களின்
கொலைக்களமாக 
மாறிவருகிறது.!


சேனாக்களெல்லாம்
பேனாக்களால்
புதையுண்டு போனதை 
உலக வரலாறு 
பதிவு செய்துள்ளது..!

குரங்குக் கூட்டம் 
மணிப்பூர் மலர்களை 
நிர்வாணமாக்கி 
வன்கொடுமை செய்து 
கொண்டுள்ளதை
நினைத்தால்...

கொலை வாளினை எடடா...
கொடியோர் செயல் அறவே...

எனும் பாவேந்தரின்
பாடலைப படித்து விட்டு 
பாய்விரித்துப்
படுப்பது தகுமோ
என்ற துடிப்பு
நெஞ்சைத் துவளச்
செய்கிறது..!

எனவே...
விடியலை
வென்றெடுப்போம் 
வா..!

ஆண்ட பரம்பரையடா
நாம் மீண்டும் 
ஆள நினைப்பதில் 
சுணக்கம் ஏனடா..!

துஞ்சியது போதும் 
விஞ்சி எழு..!
எஞ்சிய காலத்தை
நெஞ்சம் நிறைந்த 
தன்னிகரில்லாத்
தலைவன் 
ராகுல் காந்தியின் 
ஆட்சி மலர்ந்திட
உழைப்போம்..!
எழுக.! எழுக.!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

No comments:

Post a Comment