Thursday 21 March 2024

வசந்த விடியலை வரவேற்போம் வா...!

வசந்த விடியலை வரவேற்போம் வா...!


நாட்டைக் காக்க 
நெடும் பயணம்..!
பாரத தேசமெங்கும் - தன்
பாதச் சுவடுகளை பதியவிட்டு
பாசிச சக்தியின்
பிடறி முடியை 
பிடித்துப் பந்தாடி
மக்கள் உரிமையை 
மீட்டெடுக்கும்
இலட்சியப் போராளியின்
அதிரடி அறிவிப்பு..!
மோ(ச)டியின் காடியை
ஆட்டம் காண வைத்துள்ளது..!

பெண்ணினத்தின் பெருமையை
நாவால் நடனமிட்டு ஏமாற்றும்
மோடியின் தொண்டையை அடைக்கும் 
அபாய அறிவிப்பு..!
ஏழைப் பெண்களுக்கு
ஆண்டுக்கு ஒரு இலட்சம்..!
அரசு வேலையில் 50 சதவீதம்..!
அங்கன்வாடி, ஆஷா ஊழியர்கள் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு
வழங்கும் நிதி இருமடங்கு உயர்வு..!
ஆட்சிக்கு வந்த ஆண்டே
இருபது இலட்சம்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு..!

இவை அனைத்தும்..,
அடுத்து மலரப்போகும் 
மக்கள் ஆட்சியின் மகுடாதிபதி இராகுல்காந்தியின் அதிரடி
நடைப்பயண வெடிமுழக்கம்..!
நாட்டு மக்களின்
இரத்த நாளங்களில் 
இதயத்தாளங்களாய் 
ஒலிக்கத் துவங்கிவிட்டது..!

வெளிபப்டையான நிர்வாகமென 
வெளிச்சம் போட்டு 
மோடியின் ஆட்சிக்குத் துதிபாடிய பத்திரிக்கை தும்பிகளே..,
உச்சநீதிமன்ற துந்துபி முழக்கத்திற்கு பதில் என்ன?
இடிமுழக்கம் கேட்ட நாகம்போல்
அடங்கிப்போனது ஏன்..?

மோடியின் வித்தைகள்
வெளிச்சத்துக்கு வந்துவிட்டது..!
அரசின் அனைத்து அமைப்புகளையும் 
தனது பதவியைத் தக்கவைக்க பயன்படுத்தி வரும் மோடிக்கு கடைசி ஆயுதம் EVM எனும் மின்னணு வாக்கு எந்திரம்தான்..!
அதற்கும் உச்சநீதிமன்றம் வழிகாட்டும் என 
நாடு எதிர்பார்க்கின்றது..!
மோடி கும்பல்களின் முகமூடியை
நீதி தேவதைகள் கிழித்துக்கொண்டிருக்கின்றன..!
காரிருள் கரைந்து கீழ்வானம் சிவந்துவிட்டது..!

களம்காணத் துடிக்கும் காளைகளே...
களமாடுவோம் வாருங்கள்.!
தன்னம்பிக்கையின் தளநாயகன்
இராகுல்ஜீயின் தலைமையில்
வேற்றுமையின் வேரறுத்து,
ஒற்றுமை நாதம் ஓங்கி ஒலிக்க
சுதந்திர இந்தியாவின் புதிய பரிணாமத்தை பூவுலகிற்கு தருவோம்! புறப்படு...!
Do or die 
மகாத்மாவின் அன்றைய 
ஆத்ம ஒலிக்கு 
இன்று விடை காண
I.N.D.I.A கூட்டணியின் 
மறவர் கூட்டமே
தேர்தல் அழைக்கிறது...
ஒன்றுபட்டு தேர்தல் களம் காண்போம்  வா..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Saturday 2 March 2024

ராமர் ஒரு கிராமர் (Grammar)!

ராமர் ஒரு கிராமர் (Grammar)
ஜெய் ஸ்ரீ ராம் பக்தி முழக்கமா? அரசியல் முழக்கமா?

ஆலயம் தொழுவது
சாலவும் நன்று..!
கோவில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாமென்ற
முதுமொழிகளுக்கு ஏற்றம்
தந்த புனித பூமி..!

மதங்கள்
வாழ்க்கை சாகரத்தின்
வழிப்பயணத் துடுப்புகள்
என்பதை மறந்து
மதப் பேய் பிடித்து
ஆட்டம் போடுகின்றனர்..!

பல்வேறு பெயர்களில்
பல்வேறு பிரிவுகள்
என்றாலும்..,
ஒரே பரம்பொருளிடமிருந்து
உதித்தவைதான் மதங்கள்
என்பதையே சிவவாக்கியரும்
பின்வருமாறு பாடிவைத்தார்...

"தங்கம் ஒன்று ரூபம் வேறு
தன்மையானவாறு போல்
செங்கண்மாலும் ஈசனும்
சிறந்திருந்தது உம்முளே
விங்களங்கள் பேசுவீர்
விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற ராம
நாமம் இந்த நாமமே..."

மக்கள் நெஞ்சக் குழியில்
நாதமாக ஒலிக்கும்
ஆன்மீக இலக்கணமான ராமநாமத்தை
அரசியல் அரங்கில்
அரங்கேற்றம் செய்தனர்..!

கடந்த 
வங்க சட்டமன்றத் தேர்தலில்
பிஜேபி vs திரிணாமுல் காங்கிரஸ் 
என ஆரம்பித்து 
பிறகு
மோடி vs  மம்தா பானர்ஜி 
என மாற்றி 
இறுதியில்...
ஜெய் ஸ்ரீராம் vs ஜெய் காளி
என உரக்க முரசுகொட்டி
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இறுதி முடிவின் விளைவு 
ஜெய் காளியே வென்றது..!

இதிலிருந்து 
படிப்பினையைப் பெறாமல் மீண்டும் 
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்
சாதனையைச் சொல்ல
சரக்கில்லாததால்
ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை
ஒலிக்கச் செய்யும் முயற்சி...!

பக்தி மேவியதால் 
பல ஆலயங்கள் கட்டப்பட்டது வரலாறு..! 
ஆனால்...
பதவிப் பசியைத் தணித்துக்கொள்ள
மோடி அரசால் 
இராமர் ஆலயம்  கட்டப்பட்டது தகராறு..!

அன்னை கைகேயியின்
ஆணையை ஏற்று
தன் தம்பி பரதனே
நாடாளட்டும் என்று
"என் பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ"
எனப் பகர்ந்து
பதவி துறந்து கானகம் புகுந்த
உன்னத புருஷனின்
பெயரைப் பயன்படுத்தி
பதவிப் பித்தலாட்டம்
நடத்துவது தருமம்தானா..?

தற்போதைய அரசியலில்
நேரு குடும்ப இளந்தளிரின்
நடைப்பயணம்
இந்திய அரசியலையே
புரட்டிப் போட்டுக்கொண்டு
இருக்கிறது..!

வருங்காலம் 
காங்கிரஸின் ✋யில்..!
மீண்டும் ஒரு முறை
ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷம்
மதிப்பிழக்க வேண்டுமா..?
சிந்திப்பாரா மோடிஜி..?

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

புட்டிப்பால் அண்ணாமலையை நம்பி மனப்பால் குடிக்கும் மோடிஜி!

புட்டிப்பால் அண்ணாமலையை நம்பி மனப்பால் குடிக்கும் மோடிஜி..!

இது தமிழகம்..!
பகுத்தறிவின் பிறப்பிடம்..!
சுயமரியாதையின் விளைநிலம்..!
சுந்தரத் தமிழ் உணர்வின் எரிமலை..!

அரசு விழாக்களில் 
உங்களின்
அரசியல் ஆணவப் பேச்சான
'அழிப்பேன்...
ஒழிப்பேன்...
இல்லாமல் செய்வேன்...'
இவை அனைத்தும்
சர்வாதிகாரத்தின் சொல்லாடல்.
பாசிசத்தின் பக்க வாத்தியங்கள்..!

உங்களுக்கு முன்னே
பதினான்கு பிரதமர்கள்
பாரத நாட்டின் 
ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தார்கள்..!
பிரதமர் பதவிக்குப்
பெருமை சேர்த்தார்கள்..!
"வேற்றுமையில் ஒற்றுமை"
உயர்ந்து நிற்பதைக் கண்டு
உலகம் எழுந்து நின்று
கைத்தட்டிப் பாராட்டியது..!

இன்று,
உங்கள் ஆட்சியில்...
'ஓட்டு மெஷினும்..,
நோட்டு மெஷினும்'
உங்கள் கையில் என்பதால்
மக்கள் பிரதிநிதிகளை
சந்தைச் சரக்காக்கி
வேற்றுமைகளை விதைக்கின்றீர்..!
ஜனநாயகப் படுகொலை செய்யும்
உங்கள் பாதகச் செயல்களால்
உலக அரங்கில்
இந்தியாவிற்கேத் தலைகுனிவு..!

ஏற்கெனவே..,
'காங்கிரஸ் இல்லாத இந்தியா'
என்ற 
உங்கள் பாசிச முழக்கத்தை
சிங்க நடையால் 
மக்கள் இதய சிம்மாசனத்தில் கொலு வீற்றிருக்கும் 
ராகுல் காந்தியின் 
காலில் பட்டுதிர்ந்த தூசானது..!

தற்போது...
கம்பங்களைக் கண்டால்
காலைத் தூக்கிச் சிறுநீர் கழிக்கும்
ஜீவனைப்போல.,
மைக்கைக் கண்டால்
திமுகவை இழிவாகப் பேசிவருவது
புட்டிப்பால் அண்ணாமலைக்கு
வாடிக்கையாகி விட்டது..!
தமிழகம் வந்தால் 
மோடிஜியின் நாவும்
நாலாந்திர அரசியல்வாதியின்
நாக்குபோல நடனமாடுகிறது..!

2016 ஆம் ஆண்டு,
ஜெயலலிதாவின் ஆட்சிபற்றி..,
'தமிழகத்தில் "லஞ்ச லாவண்யம்"
தலைவிரித்தாடுகிறது..,
இந்த லஞ்சத்தினால் தமிழகமே 
முற்றிலும் பாதித்துப் போயிருக்கிறது'
என ஓசூரில் பேசினார்..!
அதை மறந்து,
தற்போது தமிழகம் வந்து
ஜெயலலிதாவின் ஆட்சி பற்றிப்
புகழாரம் சூட்டுகிறார்..!

தமிழ் நாட்டுத் தேர்தல் 
வாக்குப் பெட்டிகளில்
'நோட்டா'வால் தோற்கடிக்கப்பட்ட
நீங்கள்...
'திமுக இனி இருக்காது என்றும்..,
தமிழகத்திலிருந்து முற்றாக
அழிக்கப்படும் என்றும்...
இனி தேடினாலும் திமுகவைக்
காணமுடியாது' என்றும்
திமுகவிற்கு எதிராக 
தான் வகிக்கும் பிரதமர் பதவியின் தகுதிக்குக் களங்கமுண்டாகும்
வகையில் திருநெல்வேலியில்
தரம்தாழ்ந்து பேசி இருக்கிறார்..!

பிரதமர்களை உருவாக்கி
பெருமை 
பெற்ற அரசியல் சாணக்கியரும்.,
சுயநலமற்ற சொக்கத் தங்கம்.,
தனக்காக சொத்து சேர்க்காமல்
தன்னையே சொத்தாக தமிழகத்துக்குத்
தந்த அருந்தவப்புதல்வனான காமராஜர் வாழ்ந்த புண்ணிய பூமி தமிழகம்..!

தன் மண்டைச் சுரப்பால்
பகுத்தறிவு பயிர் வளர்த்த பகலவன்
பெரியாரின் விளைநிலமிது..!

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை
தமிழனின் சொத்தாக்கி
சுந்தரத்தமிழால் சொக்கவைத்து
சாமான்யனையும் அரசியல்வாதியாக்கிய
பேரறிஞர் அண்ணாவின் மண்ணிது..!

கடல்கோள்கொண்ட 
பூம்புகாரையே மீட்டு 
பூமிக்குத் தந்த வித்தகன்.,
மங்காப் புகழ்கொண்ட தமிழன்னைக்கு 
செம்மொழி மகுடம் சூட்டிய சிங்கத்தமிழ்
மறவனின் தாலாட்டில் வளர்த்தெடுத்த திமுகவை 
வீழ்த்த நினைப்பது...,
அது மோடிஜியின் பகல்கனவு..!

'கலைஞரைவிட ஸ்டாலின் ஆபத்தானவர்' என்று நீங்கள் சொன்னதையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன்..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

Thursday 22 February 2024

காவிக் கோட்டையில் ஓட்டை போட்ட காவியத் தலைவன்!

காவிக் கோட்டையில் ஓட்டை போட்ட காவியத் தலைவன்!

பஞ்சபூதங்களால்
பாராட்டி தாலாட்டப்படும்
பாரத பூமியில்
பஞ்சமா பாதகங்களின் 
அரங்கேற்றம்..!

பக்தி பகல்வேஷம் போடும்
மோ(ச)டிஜியின் ஆட்சியில்
ஆன்லைன் சூதாட்டம்..!
ஆன்லைன் விபச்சாரம்,.!
பாலியல் வன்கொடுமை..!
அதானி துறைமுகத்தில்
கஞ்சா இறக்குமதி..!
பூனே, டெல்லியில் புதுவகை
மியாவ் மியாவ் 
(தடை செய்யப்பட்ட மெபெட்ரோன்)
போதை வஸ்து விநியோகம்..!

வங்கி மோசடிப் பேர்வழிகள் 
வெளிநாடு தப்பியோட்டம்..!
விண்ணை முட்டும்
விலைவாசி ஏற்றம்..!
ஜிஎஸ்டி எனும் பெயரில்
ஏழைகளின் இரத்தத்தை
உறிஞ்சும் வரிப்புலி..!

இத்தனை தவிப்புகளுக்கும்
மகுடம் சூட்டுவதுபோல்.., 
சண்டிகர் மாநகராட்சி தேர்தலில்
நடந்த ஜனநாயகப் படுகொலை வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம்
மோடிஜி ஆட்சியின்
முகமூடியை கிழித்திருக்கிறது..!

மோடிஜி இதுவரை வென்றதாகக் கூறப்படும் எல்லா தேர்தல் முடிவுகளிலும்
இதைப் போன்ற பல்வேறு
தில்லாலங்கடி வேலைகளால்தான்
பதவியை தக்கவைத்துக்
கொண்டிருக்கிறார் என்பது
வெளிப்படையாகி உள்ளது..!
பேசுவது மக்களாட்சி
நடத்துவது பாசிச ஆட்சி..!

அடுத்தவர்கள் மீது
அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்
மோடி ஆட்சிமீது
தேர்தல் பத்திர ஊழலை
உச்சநீதிமன்ற அமர்வு
வெளிச்சத்துக்குக்
கொண்டுவந்துள்ளது..!

மோடிஜியின் கடந்த
பத்தாண்டுகால ஆட்சியில்
குண்டூசியைக்கூட
திருடவில்லையென்று
அரசியல் குறைபிரசவக்
குழந்தை கூவிக்கூவி
கூக்குரலிட்டது..!
மோடி ஆட்சியில்
ஈ.டி (அமலாக்கத்துறை)
பணம் கறக்கும்
காமதேனுவாகிவிட்டதை
நீதிமன்றத் தீர்ப்பு
நிரூபித்து உள்ளது..!

ஒற்றுமை நீதிக்காக 
என் தலைவன் நடத்தும் 
நெடும் பயணத்துக்கு
உச்ச நீதிமன்றத்தின்
இரண்டு தீர்ப்புகள் குடைபிடித்து இருக்கின்றன..!

வேற்றுமையில் ஒற்றுமை
ஒளிக் காணத் துடிக்கும்
மங்காப் புகழ் குலத்தின்
மாணிக்கச்சுடர் விளக்கு
இளம் தலைவர்
ராகுல்ஜீயின் நடைப்பயணத்திற்கு
கிடைத்த மாபெரும் வெற்றி..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA




அரண்மனை நாயே.., அடக்கடா வாயை..!

அரண்மனை நாயே..,
அடக்கடா வாயை..!

புலியைப் பார்த்து
பூனையும் சூடு
போட்டுக்கொண்ட கதையாக..,

தேசிய அளவில்
இராகுல் காந்தியின்
நடை பயணத்தைக் கண்டு...
தமிழகத்திலும் ஒரு
நடை பயணம் நடந்தது..!

நடையா அது நடையா
நாடகமன்றோ நடந்தது...

வெண்ணெய் வெட்டி அண்ணாமலைக்கு
வெளிச்சம் போட்ட
ஊடகங்கள்..!

பறையடித்து பாசுரம் பாடிய
பத்திரிகைகள்..!
அப்பப்பா...
என்ன ஆர்ப்பாட்டமான கொக்கரிப்பு..!
வாரத்திற்கு ஒரு ஊழல் பட்டியல் வெளியீடு..!
நடைப்பயண முடிவுக்குள் பல
அமைச்சர்கள் சிறைச்சாலையில் இருப்பார்கள் என்று...
ஊர் ஊராக ஊழல் என்ற
கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்த
ஊதாரிக் கூட்ட அறிவிப்பு...!

பத்திரிகைகளோ...
தமிழக அரசின் மீது
அண்ணாமலை ஊழல் அணுகுண்டுகளை வீசுவதாக
பரபரப்பாக துதி பாடின..!

கூட்டிய கூட்டத்தை 
மக்கள் வெள்ளமென
கள்ளக் கணக்கு காட்டின..!

மாநில அரசு மீது பொய்யான
குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கற்பனைக் குதிரைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்..!

கடந்த அதிமுக ஆட்சியில்
இரண்டு அமைச்சர்கள் மீது
அமலாக்கத்துறையால்
தொடுக்கப்பட்ட வழக்குகள்
நீதிமன்ற தீர்ப்புக்கு உள்ளானது தவிர...
வேறெதுவும் அண்ணாமலை 
கிழிக்கவில்லை..!

உண்மையில் ஊழல் மண்டிக்கிடப்பது மத்திய ஆட்சியில்தான்..!

வெளிநாட்டு புலனாய்வுக்குழு
ஹிண்டன்பெர்க்கின்
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை
அண்ணாமலையின்
குருமகா சன்னிதானத்தின் மீது
சுமத்தியது..!

பிரான்ஸ் நாட்டுடன் நடந்த
ரஃபேல் விமானம் வாங்கிய
வியாபார பரிவர்த்தனையில்
ஊழல் நடைபெற்றதாக
பிரான்சு அரசு மீதும்,
இந்திய அரசு மீதும்
பிரான்சு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது..!

மொரிஷியஸ் நாட்டிலிருந்து
அதானி குடும்பத்துக்கு
மாற்றப்பட்ட ரூபாய் இருபதாயிரம் கோடியை
யார் பணமென்று விசாரிக்கப்படாமல்
வேதாளம் முருங்கை மரத்தின் மீது
தொங்குவது போல
தொங்கிக்கொண்டிருக்கிறது..!

இந்த லட்சணத்தில்...
கடந்த 10 ஆண்டு ஆட்சியில்
ஒரு குண்டூசியை திருடிவிட்டார்
என்ற குற்றச்சாட்டைக் கூட
மோடி ஆட்சியின் மீது வைக்க முடியாது...
என அண்ணாமலை பொய்வாய் மலர்ந்திருக்கிறார்...!

குண்டூசி தொழிற்சாலைகளே
அவர் கோட் பாக்கெட்டில் குடியிருக்கும்போது...
ஒற்றைக் குண்டூசியை
திருடவேண்டிய
அவசியமென்ன இருக்கிறது..!

வெளிப்படையான ஆட்சி நடத்துவதாக
வெளிச்சம்போட்ட மோடிக்கு உச்சநீதிமன்றம்
மோடியின் தேர்தல் பத்திர திட்டத்தை
இரத்து செய்து நேற்றைய தீர்ப்பில்
சவுக்கடி கொடுத்திருக்கிறது..!

மக்களின் கண்களில்
மண்ணைத் தூவிவிட்டு
கட்சி நிதி எனும் பெயரில்
பெருமுதலாளிகளிடமிருந்து
சுருட்டப்பட்ட தொகையின் பட்டியலில்
முதலிடத்தில் மோடிஜி கட்சி என்பதற்கு
மேற்கண்ட படமே சாட்சி..!
உடம்பெல்லாம் பொய்யாக
உளறிக் கொண்டிருப்பது உமக்கு வாடிக்கையாகிவிட்டது..!

உம் உளறல்களில்
ஒன்றே ஒன்றுதான் நடந்தது..,

கூவாகம் கூத்தாண்டவர்
கோவில் திருவிழாவில்..,
மாலையில் தாலிகட்டி
காலையில் தாலியறுத்துக்கொள்ளும்
அரவாணிகளைப்போல...
அண்ணா திமுகவின் உறவை
அறுத்துக்கொண்டதுதான்..!

உம் கற்பனைக் கதறல்களை
படிக்கும்போது
என் மனதில் நினைவில் நிழலாடுவது
கலைஞரின் பேனாவிலிருந்து
வெடித்துக்கிளம்பிய வரிகள்..,

அரண்மனை நாயே..,
அடக்கடா வாயை..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

தமிழகத்தின் தவச்சீலன்
முப்பாலை முன்மொழிந்து
கடல்களுக்கு அப்பாலும் 
நீதி போதனைகளை 
ஏற்க முரசமிட்ட குறளாசானின்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்

என்ற கருத்துக்கு 
செயல் வடிவம் கொடுத்த பாலைவன அரபுபூமி...

"நீங்கள் புனித பள்ளிவாசல்களை
இடித்துத் தகர்த்தாலும்
இஸ்லாமிய மண்ணில்
சுவாமி நாராயணனுக்கு
கோவில் எழுப்பி இருக்கிறோம்,
உங்கள் திருக்கரத்தால்
திறந்து வைக்க வாருங்கள்"

என்று...
இந்தியப் பிரதமர்
மோடி ஜியை அழைத்து
சிறப்பு செய்த
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக்
முகமது பின் அல் சையத் நஹ்யான்
அவர்களுக்கு...

முப்பாலை உலகுக்கு ஊட்டிய வள்ளுவனின் வழிவந்த இந்நாள்
கொள்ளு கொள்ளு கொள்ளுப் பேரன்
வாலாஜா அசேனின் ஆதாப் சலாம்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

பாஸ்டிலியின் வரலாற்றை உணர மறந்தது ஏனோ..?

பாஸ்டிலியின் வரலாற்றை உணர மறந்தது ஏனோ..?

ஜனநாயகத்தின் தொட்டிலென 
ஜெகம் புகழ்ந்த இந்தியாவில் ஜனநாயகப் படுகொலையின் அரங்கேற்றம்..!

மத நல்லிணக்கத்தின்
மகுடமென பார்போற்றிய
பாரத பூமியில் 
வெறுப்பு
விதைகளின் விளைச்சல்..!

அவனிக்கு 
அகிம்சையை அளித்த 
காந்திய மண்ணில்
தடி பிடித்தவன் முடிவெடுக்கும்
பாசிச வெறியாட்டம்..!

மக்களாட்சியின் மாட்சி
மோடியின் 
மாயவலையில்
காயப்பட்டு 
கல்லறை
நோக்கிப் பயணம்..!

செக்கென்றும் 
சிவமென்றும் பாராமல் 
நக்கும் நாயைப் போல
அரசியல் சட்டத்தை
அடக்குமுறையால் 
அவமதிக்கும் அமலாக்கத்துறை..!

எதிர்க் கட்சிகளை அழிக்க..,
ஒரே நாடு...
ஒரே மொழி...
ஒரே தேர்தல்...
என உலுத்துப்போன
மன்கீ பாத்தின்
அகங்கார ஊளையோசை..!
விளைவு..,

மோடியின் 
அமலாக்கத் துறையால்
தொடுக்கப்பட்ட 
மொத்த வழக்குகள் 121..!
அதில் 
எதிர்க்கட்சித் தலைவர்களை
சிறையில் அடைத்து
தொடுக்கப்பட்ட வழக்குகள் 115..!
எதிர்க்கட்சிகள் மீது மட்டும் 
95% வழக்குகள் என்பது
அப்பட்டமான 
சர்வாதிகாரத்தின் சாயலல்லவா..!
 
நிர்வாகத்தில் 
ஆர்எஸ்எஸ் அதிகாரிகளின் ஆக்கிரமிப்பால்
பஞ்சாப் சண்டிகர்
மாநகராட்சித் தேர்தலில்
வாக்கு எண்ணிக்கையின் போது
8 வாக்குச் சீட்டுகளில்
தேர்தல் அதிகாரியே
பேனாவில் எழுதி
செல்லாத வாக்குகளாக்கி 
மோசடியாக...
பாஜக வெற்றி பெற்றதாக
அறிவித்ததை எதிர்த்து
உச்ச நீதிமன்றத்தில்
நடந்த வழக்கில்..,

நீதியரசரின் இதழ்கள் வெடித்த
சரித்திர வரிகள்...
"வாக்குச்சீட்டுகளை சிதைத்த தேர்தல் அதிகாரியை விசாரிக்க வேண்டும்.., இதை நான் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயலாகவே பார்க்கின்றேனென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் போய் சொல்லுங்கள்"
எனக் காட்டமாகக் கண்டித்தது  அதிகாரியையே என்றாலும்
அது 
மோடியின் மீது
வீசப்பட்ட சாட்டை என்பதை
உணர்வுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்..!

வரலாற்றில் 
சர்வாதிகாரம்
வாழ்ந்ததாக சரித்திரமில்லை..!
மன்னரும் மத குருமார்களும்
மக்களையடக்கி 
மரண வாசலாம்..,
பாஸ்டிலி கொடுஞ் சிறையிலடைத்து.,
சித்திரவதை செய்து
கில்லெட் எந்திரத்தால் கொன்று
குவித்ததைக் கண்டித்து.,
மக்கள் புரட்சி ஜூலை 14/1789 அன்று
எரிமலையென ஃப்ரென்ச்சில் வெடித்து.,
பாஸ்டிலி சிறைக்கூடம் தகர்க்கப்பட்டு
மன்னர் லூயியின் தலை
அதே எந்திரத்தால்
துண்டிக்கப்பட்ட நாளையே
ஃப்ரெஞ்சு மக்கள்
ஆண்டுதோறும் பாஸ்டிலி டே
எனக் கொண்டாடுகின்றனர்..!

கடந்த ஆண்டு
(ஜூலை 14 2023 அன்று)
ஃப்ரெஞ்சு அதிபர்
இம்மானுவேல் மெக்ரானின் அழைப்பை ஏற்று.,
பாஸ்டிலி டே விழாவில்
பங்கேற்று சங்கநாதம் எழுப்பி திரும்பிய பிறகும்.,
மோடி ஆட்சியின் சர்வாதிகார அடக்குமுறை தொடர்வது விந்தையிலும் விந்தை...!

வாலாஜா ஜெ. அசேன் Ex MLA