நீதிக்கான குரல்
Voice for Justice
Saturday, 2 August 2025
ஆலைக் கழிவுகளால் வாழத் தகுதியற்ற இடமாய் மாறிவிட்ட இராணிப்பேட்டை!
Wednesday, 2 April 2025
அடக்கம் அமரருள் உய்க்கும்...!
அண்ணாமலை
எனும் புண்ணாக்கு
போட்டாரே தப்புக் கணக்கு..!
காக்கியைக் கழட்டினார்.,
காவியில் குடி புகுந்தார்..!
ஆவி தீர..,
அண்டா வாயால்
அண்டப் புளுகை
அவிழ்த்து விட்டார்..!
அரசமரத்தைச் சுற்றியதும்
அடிவயிற்றை
தடவிப் பார்ப்பதுபோல்
அரசியலில்
அடியெடுத்து வைத்தவுடன்
முதலமைச்சர் பதவிக்கு
குத்தாட்டம் போட்டார்..!
அவரைப் போல
ஒரு ஐ.ஏ.எஸ்
காங்கிரஸில் சேர்ந்தார்..!
அடக்கமாக
களம் கண்டார்..!
அன்புடன் மக்களைக்
கவர்ந்தார்..!
பொய் புரட்டு வாந்தி
எடுக்கவில்லை..!
மக்கள் இதயங்களை
வென்றார்..!
கடந்த..,
மக்களவைத் தேர்தலில்
சுமார் ஐந்தரை
இலட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில்
சந்தித்த முதல்
களத்திலேயே
வெற்றிவாகை சூடி
எம்.பி ஆனார்..!
அவர்தான்
எல்லாக் களங்களிலும்
தோல்விகளே
பரிசாகப் பெற்றார்.!
பாவம் சாட்டைவீச்சு
கழைக் கூத்தாடியாக
அவரை நிற்க வைத்த
அவலத்தை
தமிழகம் கண்டது..!
எம் பாட்டன் சொன்னான்..,
"அடக்கம் அமரருள்
உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
என்று..!
இரண்டு இலட்சம்
புத்தகங்கள் படித்ததாக
தம்பட்டம் அடித்த அவர்...
பாட்டன் வள்ளுவனைப்
படிக்க மறந்து
விட்டாரே...? 🤔
Thursday, 5 December 2024
அதானியின் ஊழல் மேக வெடிப்பு!
சாக்கடை நீரில் மிதக்கும் வாலாஜா மகளிர் கல்லூரி!
வழக்கமான
பாதைதான் என்றாலும் அவளை பரந்தவெளியில் கைபிடிக்க, திறந்தவெளி நோக்கிச் சென்றேன். செல்லும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்பின்றி கிடப்பதால் அண்மையில் பெய்த
மழை நீர் பெருக்கெடுத்து கணபதி நகர் டி.என்.எச்.பி சாலையில் புரண்டோடி
சரலைகளால் சாலை வேயப்பட்டிருந்தது.
விசாலமான
இடத்தில் மூடுபனியை கைக்குள் அடக்கி,
அருகில் குளிருக்கு இதமாய் நீண்ட கவுன் அணிந்து ஒய்யாரமாய் நின்ற ஒற்றைப் பனையையும் அணைத்துக் கொண்டு, அக்கம் பக்கம் பார்த்த போது அருவெறுப்பே மிஞ்சியது.
எடக்குப்பம்-அனந்தலை செல்லும் கூட்டுச்
சாலையின் முகப்பில் வலப்பக்கம் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி. அங்கே அதன்
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குப்பை கொட்டும் பாழிடமாய் மாறிவிட்டது. வாலாஜாவிலிருந்து ஓடிவரும் சாக்கடை நீரில் கல்லூரி வளாகம் மூழ்கிப்
போனது.
அதற்கு எதிரில் ஈமக்கிரியை செய்யும் குளக்கரையின் இடப்பக்கம் ஏழை மகளிர் தங்கும் விடுதி, வலப்பக்கம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, இரண்டுக்கும் இன்றும் மண்பாதைதான். இருண்டு விட்டால் கைபேசிதான் பாதை காட்டும்.
அங்கு, முச்சந்தியில் கொட்டப்படும் நகரக் கழிவுகளின் நாற்றத்தில் நாள்தோறும் அவதியுறும் விடுதி வாசிகள். குளக்கரையில் காரியம் செய்பவர்களைக்கூட இந்த நாற்றம் தொடாமல் விடுவதில்லை. ஆனால் அது அவர்களுக்கு ஒரு நாள் கேடு. ஆனால் விடுதி வாசிகளுக்கோ அது ஒவ்வொரு நாளும் கேடு.
இதற்கு
மேற்கே, சென்னை செல்லும் முதன்மைச் சாலையில் தீனபந்து ஆசிரமம். அதையொட்டி அதன் அருகே சாலை ஓரங்களில்
கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் அருவருப்பின் உச்சம்.
சுற்றிலும்
மாணவர்கள். பூஞ்சோலையாய்
பராமரிக்கப்பட வேண்டிய இடம் இன்று பேய்கள் உலாவும் இருண்ட காடாய் உரைந்து
கிடக்கும் எடக்குப்பம் கூட்டுச்சாலை. அதிகாரிகளின் கண்கள் திறக்குமா?
இருண்ட காட்டில் வெளிச்சம் பாயுமா?
ஊரான்
Sunday, 17 November 2024
மக்களாட்சியின் மாண்புக்கு மகுடம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!
Thursday, 1 August 2024
கண்ணீர்க் கடலில் கடவுளின் தேசம்..!
இன்ப அலை எழுப்பும்
தாய் மண்ணே வணக்கம்..,
தாய் மண்ணே வணக்கம்..!
ரகுமானின் இசையால்
உள்ளம் நிறைந்த
தாய்மண்...
வயநாட்டில் சேய்களை
விழுங்கியதே..!
விடியலில் விழிப்போமென
கண்மூடியவர்களை
விடியும் முன்னே
மண்மூடியதே.!
கடவுளின் தேசத்தில்
மரணகீதம்...!
எழிலழகு இசைபாடும் பூமியில்
ஊழி வெள்ளத்தின்
ருத்ரதாண்டவம்..!
மேக வெடிப்போ...
வானக்கிழிப்போ...
வயநாடு...
காலநதியில் கரைந்து
விடைபெற்ற இடத்தின்
நினைவுச் சின்னமானதே..!