கண்ணீர்க் கடலில் கடவுளின் தேசம்..!
இதயத் தடாகத்தில்
இன்ப அலை எழுப்பும்
தாய் மண்ணே வணக்கம்..,
தாய் மண்ணே வணக்கம்..!
இன்ப அலை எழுப்பும்
தாய் மண்ணே வணக்கம்..,
தாய் மண்ணே வணக்கம்..!
ரகுமானின் இசையால்
உள்ளம் நிறைந்த
தாய்மண்...
வயநாட்டில் சேய்களை
விழுங்கியதே..!
விடியலில் விழிப்போமென
கண்மூடியவர்களை
விடியும் முன்னே
மண்மூடியதே.!
கடவுளின் தேசத்தில்
மரணகீதம்...!
எழிலழகு இசைபாடும் பூமியில்
ஊழி வெள்ளத்தின்
ருத்ரதாண்டவம்..!
மேக வெடிப்போ...
வானக்கிழிப்போ...
வயநாடு...
காலநதியில் கரைந்து
விடைபெற்ற இடத்தின்
நினைவுச் சின்னமானதே..!
வாலாஜா ஜெ.அசேன் Ex MLA
 
No comments:
Post a Comment