நீதிக்கான குரல்
Voice for Justice
Friday, 27 March 2026
இராணிப்பேட்டை தொகுதியின் விடியலுக்கு வாலாஜா ஜெ.அசேன் சட்டமன்ற உறுப்பினராவது 'காலத்தின் கட்டாயம்'!
Friday, 16 January 2026
ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!
"ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!" - எனும் கிராமத்துப் பழமொழிக்கேற்ப, ஊழலின் உச்சம் தொட்டவர்கள் இன்று உத்தமர் வேஷம் போடுகிறார்கள்!
'ஆட்சியில் ஊழல், ஊழல், ஊழல்' என்று ஊர் ஊராகப் பல்லிளித்துப் பேசி வருகிறார் பழனிசாமி..!
அடையாளம் தெரியாமல் இருந்த அக்ரகாரச் சிறையை, அகில இந்தியாவிற்கும் அடையாளம் காட்டியது யார் ஆட்சி?
செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கோட்டைவிட்ட பிறகு, நீதிமன்ற வளாகங்களில் உலாவரும் முன்னாள் அமைச்சர்கள் எந்தக் கட்சி?
குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிடலாமா?
தியாகக் கனலில் புடமிடப்பட்டு, பொதுநலத்தில் தன்னை அர்ப்பணித்து, தமிழகத்தின் வரலாற்றையே மாற்றி, நிர்வாகத் திறனில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் தலைநிமிரச் செய்தவர் நம் முதல்வர். தமிழ் மணம் கமழப் புத்தாண்டை மலரச் செய்த வித்தகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை, இனப்பற்றற்ற, மொழிப்பற்றற்ற பாதம் தாங்கிகள் வீழ்த்த நினைப்பது துரோகத்தின் உச்சகட்டம்!
எம்.ஜி.ஆர் அவர்களாலும், அம்மையார் ஜெயலலிதாவாலும் இரும்புக் கோட்டையாகக் கட்டியமைக்கப்பட்ட அதிமுகவை மணல் கோட்டையாக்கிச் சிதைத்து, விழுதுகளையெல்லாம் வெளியேற்றி, கட்சியை அடமானம் வைத்தது போல் தமிழகத்தின் உரிமைகளையும் அமித்ஷாவிடம் அடமானம் வைக்க ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறீர்கள்!
தங்களின் பேச்சு "கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் காட்டுவேன்" என்று கூறுவதைப் போன்ற வெற்றுப் பேச்சு! வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது!
- வாலாஜா அசேன், முன்னாள் MLA
Friday, 19 December 2025
கரூர் துஷ்ட தேவதையின் பகற்கனவு!
Saturday, 2 August 2025
ஆலைக் கழிவுகளால் வாழத் தகுதியற்ற இடமாய் மாறிவிட்ட இராணிப்பேட்டை!
Wednesday, 2 April 2025
அடக்கம் அமரருள் உய்க்கும்...!
அண்ணாமலை
எனும் புண்ணாக்கு
போட்டாரே தப்புக் கணக்கு..!
காக்கியைக் கழட்டினார்.,
காவியில் குடி புகுந்தார்..!
ஆவி தீர..,
அண்டா வாயால்
அண்டப் புளுகை
அவிழ்த்து விட்டார்..!
அரசமரத்தைச் சுற்றியதும்
அடிவயிற்றை
தடவிப் பார்ப்பதுபோல்
அரசியலில்
அடியெடுத்து வைத்தவுடன்
முதலமைச்சர் பதவிக்கு
குத்தாட்டம் போட்டார்..!
அவரைப் போல
ஒரு ஐ.ஏ.எஸ்
காங்கிரஸில் சேர்ந்தார்..!
அடக்கமாக
களம் கண்டார்..!
அன்புடன் மக்களைக்
கவர்ந்தார்..!
பொய் புரட்டு வாந்தி
எடுக்கவில்லை..!
மக்கள் இதயங்களை
வென்றார்..!
கடந்த..,
மக்களவைத் தேர்தலில்
சுமார் ஐந்தரை
இலட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில்
சந்தித்த முதல்
களத்திலேயே
வெற்றிவாகை சூடி
எம்.பி ஆனார்..!
அவர்தான்
எல்லாக் களங்களிலும்
தோல்விகளே
பரிசாகப் பெற்றார்.!
பாவம் சாட்டைவீச்சு
கழைக் கூத்தாடியாக
அவரை நிற்க வைத்த
அவலத்தை
தமிழகம் கண்டது..!
எம் பாட்டன் சொன்னான்..,
"அடக்கம் அமரருள்
உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
என்று..!
இரண்டு இலட்சம்
புத்தகங்கள் படித்ததாக
தம்பட்டம் அடித்த அவர்...
பாட்டன் வள்ளுவனைப்
படிக்க மறந்து
விட்டாரே...? 🤔
Thursday, 5 December 2024
அதானியின் ஊழல் மேக வெடிப்பு!
சாக்கடை நீரில் மிதக்கும் வாலாஜா மகளிர் கல்லூரி!
வழக்கமான
பாதைதான் என்றாலும் அவளை பரந்தவெளியில் கைபிடிக்க, திறந்தவெளி நோக்கிச் சென்றேன். செல்லும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்பின்றி கிடப்பதால் அண்மையில் பெய்த
மழை நீர் பெருக்கெடுத்து கணபதி நகர் டி.என்.எச்.பி சாலையில் புரண்டோடி
சரலைகளால் சாலை வேயப்பட்டிருந்தது.
விசாலமான
இடத்தில் மூடுபனியை கைக்குள் அடக்கி,
அருகில் குளிருக்கு இதமாய் நீண்ட கவுன் அணிந்து ஒய்யாரமாய் நின்ற ஒற்றைப் பனையையும் அணைத்துக் கொண்டு, அக்கம் பக்கம் பார்த்த போது அருவெறுப்பே மிஞ்சியது.
எடக்குப்பம்-அனந்தலை செல்லும் கூட்டுச்
சாலையின் முகப்பில் வலப்பக்கம் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி. அங்கே அதன்
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குப்பை கொட்டும் பாழிடமாய் மாறிவிட்டது. வாலாஜாவிலிருந்து ஓடிவரும் சாக்கடை நீரில் கல்லூரி வளாகம் மூழ்கிப்
போனது.
அதற்கு எதிரில் ஈமக்கிரியை செய்யும் குளக்கரையின் இடப்பக்கம் ஏழை மகளிர் தங்கும் விடுதி, வலப்பக்கம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, இரண்டுக்கும் இன்றும் மண்பாதைதான். இருண்டு விட்டால் கைபேசிதான் பாதை காட்டும்.
அங்கு, முச்சந்தியில் கொட்டப்படும் நகரக் கழிவுகளின் நாற்றத்தில் நாள்தோறும் அவதியுறும் விடுதி வாசிகள். குளக்கரையில் காரியம் செய்பவர்களைக்கூட இந்த நாற்றம் தொடாமல் விடுவதில்லை. ஆனால் அது அவர்களுக்கு ஒரு நாள் கேடு. ஆனால் விடுதி வாசிகளுக்கோ அது ஒவ்வொரு நாளும் கேடு.
இதற்கு
மேற்கே, சென்னை செல்லும் முதன்மைச் சாலையில் தீனபந்து ஆசிரமம். அதையொட்டி அதன் அருகே சாலை ஓரங்களில்
கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் அருவருப்பின் உச்சம்.
சுற்றிலும்
மாணவர்கள். பூஞ்சோலையாய்
பராமரிக்கப்பட வேண்டிய இடம் இன்று பேய்கள் உலாவும் இருண்ட காடாய் உரைந்து
கிடக்கும் எடக்குப்பம் கூட்டுச்சாலை. அதிகாரிகளின் கண்கள் திறக்குமா?
இருண்ட காட்டில் வெளிச்சம் பாயுமா?
ஊரான்


.webp)










